காவிரி ஆணைய உத்தரவு பரிசீலிக்கப்படும்- கிருஷ்ணா
பெங்களூர்:
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நீர் ஆணையத்தின் உத்தரவை பரிசீலனைசெய்வோம் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார்.
கர்நாடகத்தில் கிருஷ்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்று 3 ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி அவர்நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
காவிரி நதிநீர் ஆணையம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.கர்நாடகத்தில் மழைக்காலம் முடிந்துவிட்டது. மேலும் பெய்த மழையளவும் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால்தமிழ்நாட்டில் இனிமேல்தான் மழைக்காலம் ஆரம்பிக்கிறது.
எனவே கர்நடகத்தில் மேலும் பெய்யும் மழையளவைக் கருத்தில்கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதுபற்றிப் பரிசீலிக்கப்படும்.
மேலும் தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து வீரப்பனைத் தேடும் வேட்டை தீவிரமடைந்துள்ளது.இப்போது மழைக்காலமாக இருப்பதால் அடர்ந்த காட்டிற்குள் நமது படை நுழைய சற்று சிரமமாக இருப்பதால்அந்தப் பணியில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படையை மத்திய அரசு வாபஸ் பெற்றதற்குச் சரியான காரணத்தைத் தான் கூறியுள்ளது.அவர்கள் இல்லாவிட்டாலும் அதிரடிப்படையின் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி தேடுதல் வேட்டை தொடர்ந்துதொய்வில்லாமல் நடக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications