கைக்குழந்தைகளுடன் தேர்தல் பணிக்கு வந்த 5 பெண் போலீசார்
ஈரோடு:
தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு கைக்குழந்தைகளுடன் வந்த 5 பெண் போலீசாரை அதிகாரிகள் திருப்பிஅனுப்பிவிட்டனர்.
உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப்பாதுகாப்புப் பணியில் போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் மற்றும ஊர்க்காவல் படையினர்ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 100 பெண் போலீசாரும் அடங்குவர்.
அவர்களில் 5 பெண் போலீசார் தங்கள் கைக்குழந்தைகள் சகிதமாக பாதுகாப்புப் பணிக்கு வந்து விட்டனர். இதைக்கேள்விப்பட்ட போலீ"ஸ் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே கைக்குழந்தைகளுடன் வந்த பெண் போலீசாரைத் தொடர்பு கொண்டு அவர்களை திரும்பிச் சென்றுவிடுமாறு உத்தரவிட்டனர். ஏனென்றால் கைக் குழந்தையுடன் வந்தால் பாதுகாப்புப் பணி பாதிக்கப்பட்டுவிடும்என்பதால் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications