பாகிஸ்தானில் பயங்கர வன்முறை - அமெரிக்க ஓட்டலுக்கு தீவைப்பு
கராச்சி:
பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் இஸ்லாமிய மதவாதிகள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது,பயங்கர வன்முறை வெடித்தது. அப்போது அந்நகரில் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான ஓட்டல் ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
கடந்த திங்கள்கிழமையிலிருந்தே பாகிஸ்தானில் பெரும் வன்முறை நிலவி வருகிறது. அமெரிக்காவுக்கு எதிராககோஷங்கள் எழுப்பியும், அமெரிக்க கொடிகளை எரித்தும் அந்த மதவாத அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை போராட்டத்தைத் தொடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கராச்சியில்உள்ள ஒரு ஓட்டலுக்குத் தீவைத்தனர்.
அமெரிக்காவுக்குச் சொந்தமான இந்த ஓட்டலின் பெயர்ப் பலகை மூடி மறைக்கப்பட்ட போதிலும், அங்கு அந்தஓட்டல் இருப்பதை வன்முறையாளர்கள் நன்றாகவே அறிந்திருந்தனர்.
இதனால் அவர்களின் வன்முறைக்கு இந்த ஓட்டல் தப்பவில்லை. ஓட்டலுக்குத் தீவைத்ததோடு நில்லாமல்,அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பஸ்கள், 3 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிளுக்கும் தீவைத்து விட்டுஅவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதற்கிடையே, வன்முறையாளர்களைத் தடுக்க முயன்ற போலீசார் மீது அவர்கள் கற்களைக் கொண்டு வீசினார்கள்.இதையடுத்து போலீசாருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் இரு தரப்பிலும் ஏராளமானோர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது.