மலேசியாவில் முஸ்லீம்கள் போராட்டம் - போலீசார் துப்பாக்கி சூடு
கோலாலம்பூர்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலை எதிர்த்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ளஅமெரிக்க தூதரகம் முன் 3,000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கமான வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குப் பிறகு முஸ்லீம்கள் இந்தப் போராட்டத்தைத் துவக்கினர்.
அமைதியாக நடந்து கொண்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம், பிற்பகலில் தீவிரமாகியது. தொடர்ந்து வன்முறையும்வெடித்தது.
அமெரிக்க தூதரகம் அருகிலேயே முஸ்லீம்கள் வழிபாடு செய்ய முயன்றனர். அதற்கு அனுமதியளிக்காத மலேசியபோலீசார், அவர்களைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.
அவர்கள் கலைந்து செல்ல மறுக்கவே, போலீசார் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள்கலைந்து ஓட ஆரம்பித்தனர். இதனால் அமெரிக்க தூதரகம் இருக்கும் சாலை முழுவதும் போர்க்களம் போல காட்சிஅளித்தது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய தகவல் ஏதும் இல்லை.