For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியாவில் முஸ்லீம்கள் போராட்டம் - போலீசார் துப்பாக்கி சூடு

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்:

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலை எதிர்த்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ளஅமெரிக்க தூதரகம் முன் 3,000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"அமெரிக்காவை அழிக்க வேண்டும்", "இஸ்லாம் நீண்ட நாட்களுக்கு வாழும்" மற்றும் "முஸ்லீம்களுக்கு எதிரானதாக்குதலை நிறுத்த வேண்டும்" என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில்ஏந்தி, அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

வழக்கமான வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குப் பிறகு முஸ்லீம்கள் இந்தப் போராட்டத்தைத் துவக்கினர்.

அமைதியாக நடந்து கொண்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம், பிற்பகலில் தீவிரமாகியது. தொடர்ந்து வன்முறையும்வெடித்தது.

அமெரிக்க தூதரகம் அருகிலேயே முஸ்லீம்கள் வழிபாடு செய்ய முயன்றனர். அதற்கு அனுமதியளிக்காத மலேசியபோலீசார், அவர்களைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

அவர்கள் கலைந்து செல்ல மறுக்கவே, போலீசார் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள்கலைந்து ஓட ஆரம்பித்தனர். இதனால் அமெரிக்க தூதரகம் இருக்கும் சாலை முழுவதும் போர்க்களம் போல காட்சிஅளித்தது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய தகவல் ஏதும் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X