கோபி அன்னானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நார்வே:
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கோபி அன்னானுக்கும், ஐ.நா. சபைக்கும் 2001ம் ஆண்டுக்கானஅமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்தளிக்க நார்வே நோபல் பரிசு கமிட்டி முடிவுசெய்துள்ளது.
கோபி அன்னான் அவருடைய முழு வாழ்க்கையையும் ஐ.நா.சபையின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்துவிட்டார். அந்தச்சபையின் பொதுச் செயலாளராக இருந்துகொண்டு அதற்கு புத்துயிர் அளித்துவருகிறார்.
ஏற்கனவே சபையின் நோக்கங்களாகச் சொல்லப்பட்ட அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுடன் சேர்த்துமனிதை உரிமையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
மேலும் சர்வதேச அளவில் பரவிவரும் தீவிரவாதம், எய்ட்ஸ் போன்றவற்றை எதிர்கொள்ள சபையின்முழுபலத்தையும் பயன்படுத்திவருகிறார்.
ஐ.நா. சபையைப் பொறுத்தவரை ஏராளமான சாதானைகளைச் சாதித்துப் பல வெற்றிகளையும், பலசோதனைகளைச் சந்தித்து பின்னடைவுகளையும் பெற்றுள்ளது.
எனவே உலக அமைதிக்காகவும், ஒத்துழைப்புக்காகவும் கொடுக்கப்படும் நோபல் பரிசு ஐ.நா. சபைக்கும், அதன்பொதுச் செயலாளர் கோபி அன்னானுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications