காவிரி பிரச்சனை: மத்திய அரசு உதவ கருணாநிதி கோரிக்கை
சென்னை:
காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் போட்டுள்ள வழக்கைமத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
காவிரி நதி நீர் ஆணைய உத்தரவை கர்நாடகா ஏற்காவிட்டால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்குக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மத்திய அரசு செயல்படவேண்டும் என்றார்.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரை திறந்துவிடாத காரணத்தால்தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள்பாதிப்படைந்துள்ளன.
இதையடுத்து கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசுவழக்குத் தொடர்ந்தது.
கடந்த புதன்கிழமை பிரதமர் தலைமையில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்திலும்தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் கூறிவிட்டது.
இதையடுத்து காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்கைதுரிதப்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் காவிரி நதி நீர் ஆணையம் கர்நாடக அரசு தமிழக அரசுக்கு காவிரி நீரைதிறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதை கர்நாடகம் ஏற்க மறுத்து வருகிறது.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து கூறுகையில்,
காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக காவிரி நதி நீர் ஆணைய உத்தரவை கர்நாடகாஏற்காவிட்டால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்டுள்ள வழக்குக்கு மத்திய அரசுஆதரவு அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும்.
காவிரி நதி நீர் ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்குஉத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாகூறியுள்ளார். அவர் என்ன கூறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது வன்முறையை தூண்டும் விதமாக அதிமுகசுவரொட்டிகளை ஒட்டி வருகிறது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
மத்தியில் பா.ஜ.க. அரசை திமுக ஆதரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications