அரேபியாவின் உதவி நிதியை திருப்பிக் கொடுத்த அமெரிக்கா
நியூயார்க்:
நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டட நிவாரண நிதிக்காக சவுதி அரேபிய இளவரசர் அளித்த 10 மில்லியன்டாலர்கள் உதவித் தொகையை நியூயார்க் மேயர் ஏற்க மறுத்து விட்டார்.
ஆனால், அதற்குப் பிறகு சவுதி இளவரசர் வெளியிட்டுள்ள அறிக்கைதான் மேயரைக் கடும் கோபத்துக்குள்ளாக்கிவிட்டது.
"பாலஸ்தீனத்தில் நடந்து வரும் தாக்குதல்களின் உண்மையான நிலவரத்தை அறியாமல் இஸ்ரேலுக்கு மட்டுமேஅமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது" என்று சவுதி இளவரசர் கூறியதுதான் தாமதம், அவர் கொடுத்தசெக்கை உடனடியாக நிறுத்தி வைக்க நியூயார்க் மேயர் உத்தரவிட்டார்.
அந்த செக் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதா என்பதை முதலில் விசாரித்த மேயர், அவ்வாறு டெபாசிட்செய்யப்படவில்லை என்பதை அறிந்ததும், சவுதியின் இந்த உதவித் தொகையை ஏற்க மறுத்து விட்டார்.
சவுதி அரேபியாவுக்கு நேற்று பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் நேற்று செல்வதாக இருந்தது. அவரை அங்கு வரஅனுமதி மறுத்துவிட்டது அரேபியா.