தினமும் 1 டி.எம்.சி. காவிரி நீர் வேண்டும் - உச்ச நீதிமன்றத்திடம் தமிழகம் வலியுறுத்தல்
டெல்லி:
தினந்தோறும் குறைந்தது 1 டி.எம்.சி. அளவு காவிரி நீரை கர்நாடக அரசு தமிழகத்திற்காகத் திறந்து விடவலியுறுத்துமாறு உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த 10ம் தேதி (நேற்று முன்தினம்) காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து,இனி உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நம்புவது என்ற முடிவுக்குத் தமிழகம் வந்துவிட்டது.
ஆணையக் கூட்டம் முடிந்த பல மணி நேரங்களுக்குப் பிறகே, நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில்கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவரும் பிரதமருமான வாஜ்பாய் உத்தரவிட்டார்.
ஆனாலும் கர்நாடக அரசு இதைப் பெரிதாக எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை. ஆணையத்தின்உத்தரவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளாரேதவிர, காவிரியில் நீர் திறந்து விடுவதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.
இந்நிலையில், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்த வேண்டும் என்று ஏற்கனவே தொடரப்பட்டவழக்கு குறித்து, இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு நினைவூட்டியது.
தினமும் குறைந்தது 1 டி.எம்.சி. காவிரி நீரையாவது கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் மூலம்தான் தற்போது நடவில் உள்ள சம்பா பயிர்கள் பிழைக்கும் என்பதையும் கண்ணீர் விடாத குறையாகஉச்ச நீதிமன்றத்திடம் தமிழகம் எடுத்துக் கூறியுள்ளது.