For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவ நடவடிக்கை: வாஜ்பாய்

By Staff
Google Oneindia Tamil News

வாரணாசி:
காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவத்தாக்குதல் நடத்தப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

உத்திரப்பிரதேச மாநிலம் பால்லியாவில் ஏற்பாடுசெய்யப்பட்ட ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக வாஜ்பாய்வாராணாசிக்கு வந்தார்.

காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க இதுவே நல்ல தருணம் என்று காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாகூறியுள்ளதைப் பற்றி பிரதமரிடம் அப்போது நிருபர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்துப் பேசுகையில் வாஜ்பாய்கூறியதாவது,

தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டவேண்டும் என்பதில் மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது. அவர்களுக்கு எதிராகராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

மேலும் தீவிரவாதத்தையும் இஸ்லாம் மதத்தையும் சில நாடுகள் இணைத்துப் பேசிவருகின்றன. சில இஸ்லாமியநாடுகள் தீவிரவாதத்தைப் புனிதப் போர் என்று கூறிவருகின்றன. தீவிரவாதம் மனித சமுதாயத்துக்கு எதிரானது.

பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சர்வதேச நிர்பந்தம் காரணமாகதற்போது அந்நாடு, அமெரிக்காவை ஆதரித்து வருகிறது.

இவ்வாறு பிரதமர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X