அமெரிக்காவை எதிர்க்க இஸ்லாமிய மத குருக்கள் கோரிக்கை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை நடந்த தொழுகைகளில் அமெரிக்காவுக்கு எதிராக புனிதப்போருக்கு மதத் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இதனால் பாகிஸ்தானே பல மணி நேரம் ஸ்தம்பித்துவிட்டது.
பள்ளிவாசல்களில் பேசிய மத குருமார்கள் அமெரிக்காவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வெளியிட்டனர். ஜார்ஜ் புஷ் தான் உலகின்மிகப் பெரிய தீவிரவாதி எனக் கூறிய அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகப் போராட வேண்டும். அமெரிக்காவுக்கு ஆதரவாகஉள்ளவர்களையும் கொல்ல வேண்டும். ரஷ்யாவுக்கும், இங்கிலாந்துக்கும் ஆப்கானியர்கள் புகட்டிய பாடத்தை அமெரிக்காவுக்கும் புகட்டவேண்டும்.
நார்த்தர்ன் அலையன்ஸ் விமானங்கள்: அமெரிக்கா கோரிக்கை
அமெரிக்கா கேட்டுக் கொண்டதையடுத்து நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தங்களது ராணுவ விமானங்களையும் ஹெலிகாப்டர்களை ஆப்கானிஸ்தானுக்குள்இயக்குவதை நிறுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர்களை தலிபான்களின் ஹெலிகாப்டர்கள் என பலமுறை அமெரிக்க போர் விமானிகள் கருதி தாக்க முயன்றனர். கடைசி நேரத்தில் விவரம்தெரிந்து தாக்குதலை கைவிட்டனர்.
இதையடுத்து குழப்பத்தைத் தவிர்க்க ஹெலிகாப்டர்களை இயக்க வேண்டாம் என அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இதை நார்த்தர்ன்ஸ் அலையன்ஸ் படையினர்ஏற்றுக் கொண்டு ஹெலிகாப்டர்களை தரையிறக்கிவிட்டனர்.
முன்னதாக அவ்வப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் தலிபான் படைகளின் நடமாட்டத்தை அறிந்து அவர்களை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தாக்கி வந்தனர்.
அதே போல ஆயுதங்களையும் படையினரையும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப பயன்படுத்தி வரும் விமானங்களையும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர்தரையிறக்கிவிட்டனர்.