For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காபூலை நோக்கி முன்னேறும் நார்த்தர்ன் அலையன்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

காபூல்:

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் எதிரிகளான நார்தர்ன் அலையன்ஸ் படையினர் காபூலை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

தலிபானின் ஆதிக்கத்தில் இருக்கும் காபூலை அமெரிக்க விமானங்கள் ஒரு பக்கம் குண்டு மழை பொழிந்து தாக்கிக்கொண்டிருந்த போதிலும், மறு பக்கம் தரைமார்க்கமாக நார்தர்ன் அலையன்ஸ் படையினர் நெருங்கி வருகின்றனர்.

தங்கள் படைகள் முழு பலத்துடன் இருப்பதாகக் கூறிவரும் நார்தர்ன் அலையன்ஸ் வீரர்கள், ஆப்கானிஸ்தான்முழுவதிலுமுள்ள தலிபான்கள் மற்றும் பின் லேடனின் படைகளை அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும்கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் பெரும் தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தஜிகிஸ்தானின் தெற்கில்உள்ள குண்டூஸ் மற்றும் தலோகான் நகரங்கள் முழுவதும் நார்தர்ன் அலையன்ஸ் படையினர்குவிக்கப்பட்டுள்ளனர்.

காபூலை நோக்கி முன்னேறும் நார்தர்ன் அலையன்ஸ் தரப்பில் 15,000 வீரர்கள்தான் உள்ளனர். ஆனால், காபூலில்மட்டும் 40,000 தலிபான் படையினர் இவர்களை எதிர்ப்பதற்குத் தயாராக உள்ளனர்.

இதனால், மிகமிக மெதுவாகத்தான் நார்தர்ன் அலையன்ஸ் படை காபூலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே மத்திய ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கைவசம் இருந்த சாக்சரன் என்ற நகரத்தை நார்தர்ன்அலையன்ஸ் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கடந்த 48 மணி நேரமாகத் தொடர்ந்து கடுமையாகப் போராடிய பிறகே சாக்சரன் நகரத்தைக் கைப்பற்றியுள்ளனர்நார்தர்ன் அலையன்ஸ் படையினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X