காங்கிரசுடன் த.மா.கா. இணையுமா?
நாகர்கோவில்:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, காங்கிரசுடன் இணையும் வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் செயலாளர் ரமேஷ்சென்னிதாலா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதிரித்து பிரச்சாரம்செய்வதற்காக ரமேஷ் சென்னிதாலா நேற்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி வந்திருந்தார். அதன் பின் அவர்நாகர்கோவிலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்குஅதிக அதிகாரம் வழங்கப்பட்டால்தான் அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும்.
கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் அங்கு உள்ளாட்சி அமைப்புகள் சிறந்த முறையில் செயல்படுகின்றன.தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 90 சதவிகித வெற்றி வாய்ப்புகள் உள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி காங்கிரசுடன் இணையும் வாய்ப்பு உள்ளது. மறைந்த தலைவர் மூப்பனாரின்விருப்பமும் அதுதான். காந்தி,காமராஜ் ஆகியோரது கனவை நனவாக்க மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் சென்னிதாலா.












Click it and Unblock the Notifications