உரிமம் பெறாமல் "மெத்தனால்" விற்பது கொலைக் குற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உரிமம் பெறாமல் மெத்தனால் விற்றால் கொலை வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என்று கள்ளத்தனமாகமெத்தனால் விற்பவர்களுக்கு மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பரம்வீர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது கூறியதாவது:

கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது மதுவிலக்குப் போலீசார் எடுத்த நடவடிக்கையில் இதுவரை 4,705பேர் கைது செய்யப்பட்டுள்ளளனர்.

மெத்தனால் என்பது கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஒரு வேதிப்பொருள். எனவே அதை விற்பது கொலைக்குற்றத்திற்குச் சமமானது.

இருப்பினும் இதைப்பயன்படுத்தி பெயின்ட், வார்னிஷ் ஆகியவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதற்கானஉரிமத்தை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும்.

உரிமம் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்குத் திருப்பி அளிக்கப்படும். ஆனால் உரிமம் எதுவும் இல்லாமல் விற்றால்அவர்கள் மீது கொலைக் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களுக்குத் துணையாக இருப்பவர்கள் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்படும்.

இந்த மெத்தனால் லாரிகளில் கொண்டுவரப்படும் போது அது ஆவியாக வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பைப்பயன்படுத்தி லாரி டிரைவர்கள் அதிக அளவு மெத்தனாலை லாரியிலிருந்து எடுத்து கள்ளச்சாராயவியாபாரிகளுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர்.

இவ்வாறு செய்யப்படுவதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+