7 மாணவர்களுக்கு பன்னீர் நிதியுதவி
சென்னை:
உயர் கல்வி படிப்பதற்கு நிதியுதவி கோரிய 7 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை முதல்வர் பன்னீர் செல்வம் தலாரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
ஏழ்மையான நிலையில் இருப்பதால் உயர் கல்வி பயில நிதியுதவிகேட்டு, நாமக்கல் சங்கீதா, சென்னை சாந்தி,மதுரை சுரேஷ்குமார், தூத்துக்குடி ரத்னக்குமார் ஆகியோர் இன்ஜினியரிங் கல்வி பயில உதவி கோரி விண்ணப்பம்செய்திருந்தனர்.
மேலும் அரியலூர் காந்திமதி செவிலியர் கல்வி பயிலவும், காஞ்சிபுரம் சுகுணா மருந்தியல் கல்விக்கும், திருச்சிபாண்டியன் முதுகலைப் படிப்புக்கும் உதவி கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களின் மனுக்களைப் பரிசீலித்த முதல்வர் பன்னீர் செல்வம் அனைவருக்கும் தலா ரூ.25 ஆயிரத்தை, முதல்வர்பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முடிவெடுத்தார்.
அதன்படி நேற்று அவர்களைத் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து, அதற்கான காசோலையை முதல்வர்வழங்கினார்.












Click it and Unblock the Notifications