சோனியாவின் குடியுரிமையை சந்தேகிக்கிறார் சுவாமி
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்துசெய்யக் கோரி கோர்ட்டில் வழக்குத்தொடரப் போகிறேன் என்று சுப்ரமணியம் சுவாமி கூறினார்.
இதுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சோனியா காந்தி கடந்த 1983ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி தான் இந்தியக் குடியுரிமை பெற்றார். அதுகுறித்து அவர்அவர் அளித்த விண்ணப்பத்தில் குடியுரிமைக்கு தகுதியற்ற முக்கியமான சில விஷயங்களை மறைத்துள்ளார்.
எனவே அதை எடுத்துக்காட்டி, அவரது குடியுரிமையை ரத்துசெய்யவேண்டும் என்று நான் உள்துறை அமைச்சர்அத்வானிக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே நான் கோர்ட்டில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்துசோனியாவின் குடியுரிமையை ரத்து செய்ய வாதாடுவேன் என்றார்.
சோனியா காந்தியின் இந்தியக் குடியுரிமை செல்லும் என்று கடந்த மாதம்தான் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பைஅளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications