For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரமக்குடி முதியவர்களின் "பொழுதுபோக்கு கிளப்"

By Staff
Google Oneindia Tamil News

பரமக்குடி:

பரமக்குடியில் வைகை ஆற்றங்கரையோரம் ஆடுபுலி ஆட்டம் ஆடுவதுதான் கடந்த 7 ஆண்டுகளாக அந்தப் பகுதிமுதியவர்களின் பொழுதுபோக்காக இருக்கிறது.

மாலை 3 மணிக்கே தொடங்கிவிடும் இவர்களின் அணிவகுப்பு, 4 மணிக்குள் அவரவர் தங்களுக்கு வேண்டியஎதிராளியைத் தேர்வு செய்து ஆட்டத்தை ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இந்த ஆட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் காசுக்கு வேலையே இல்லை. செஸ் விளையாட்டைப் போலமூளைக்குத்தான் வேலை.

இதனால் அனாவசியச் சண்டைக்கு அங்கே இடமில்லை. வெறும் கற்கள் தான் இதற்குத் தேவையான கிட்ஸ். 15சிறிய கற்கள்தான் ஆடுகள். 3 சற்றே பெரிய கற்கள்தான் புலிகள்.

வயதான காலத்தில் தங்கள் கவலைகளை மறந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள அந்தப் பகுதியிலுள்ள பலகிராமங்களில் இருந்தும் ஆட்டக்காரர்கள் தினமும் வருகிறார்கள்.

வறட்சிக்குப் பெயர் போன ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலையில்லாமல் சும்மா உட்கார்ந்திருப்பதைவிடவும்,காசு வைத்து சீட்டாடி இருப்பதையும் இழப்பதை விடவும் இது மேலானதுதான்.

4 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டம் மாலையில் சூரியன் மறையும் வரை நடைபெறுகிறது. கையில் ஒரு கட்டுப்பீடியுடன் வந்தால் ஒரு 3 மணி நேரப் பொழுது அசால்டாகக் கழிகிறது என்றால் அதிலென்ன கஷ்டம் இந்தமுதியவர்களுக்கு. அதுதான் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் வீட்டில் உள்ள பிரச்சனைகளை மறந்து, இங்கு வந்து ஆடுபுலி ஆட்டத்தில் கவனம் செலுத்துவதால்,ஆடும்போது மகிழ்ச்சியாக இருப்பதுடன், இரவில் நன்றாகத் தூங்கவும் முடிகிறது என்கிறார்கள் அந்தப் பெரிசுகள்.

வாழ்க ஆடுபுலி ஆட்டம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X