உள்ளாட்சித் தேர்தல் - நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் நாளை முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது என்றும் அசம்பாவிதம் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்றும் தமிழக டி.ஜி.பி.நெய்ல்வால் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய 4 மாநகராட்சிகளுக்கும், 44 நகராட்சிகள், 307 பேரூராட்சிகள்,195 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவுநடைபெறுகிறது.

இதையொட்டி வாக்கப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும்பகுதிகளில் முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறைத் தலைவர்நெய்ல்வால் கூறினார். அவர் நிருபர்களிடம் திங்கள்கிழமை (இன்று) மேலும் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப் பணிக்காக 84 ஆயிரம் பேர்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் தமிழக போலீசார், சி.ஆர்.பி.எப்., ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஆந்திர மாநிலஅதிரடிப்படை, கேரள மாநில அதிரடிப்படை, மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோர் அடங்குவர்.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 4,000 இடங்கள் பதட்டம் நிறைந்த பகுதிகளாக அடையாளம்காணப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 5,005 இடங்கள் பதட்டம் நிறைந்தபகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் நடக்கவாய்ப்பில்லை என் நம்புகிறோம் என்றார் நெய்ல்வால்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+