ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்கத் தாக்குதல் ஆரம்பம்
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீது முதன்முறையாக ஹெலிகாப்டர்களைக் கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் ஆப்கானஸ்தான் மீது குறைந்த உயரத்தில் சென்று பயங்கர தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர் தாக்குதலைஅமெரிக்கா தொடங்கிவிட்டது. ஹெலிகாப்டர்களை பயன்படுத்தினால் இலக்குகளை குறி பிசகாமல் தாக்க முடியும்.தலிபான் படைகளின் நடமாட்டத்தையும் நேரில் கண்காணிக்க முடியும்.
நேற்று இரவு முதல்முறையாக அமெரிக்க ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. தலிபான்களின்தலைமையகமான காண்டஹாரில் உள்ள முக்கிய ராணுவ இலக்குகளை இந்த ஹெலிகாப்டர்கள் தாக்கின. இரவுமுழுவதுமே இந்த ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து குண்டுகளையும் ஏவுகணைகளையும் வீசின.
அமெரிக்காவான் ஏ.சி.-130 ரக கன்ஷிப்கள் என்று அழைக்கப்படும் ஹெலிகாப்டர்கள் நேற்றைய தாக்குதலில் முழுஅளவில் பயன்படுத்தப்பட்டன.
மருத்துவனை சிதறியது:
காண்டஹார் அருகே உள்ள தாமன் மாவட்டத்தில் ஒரு மருத்துவனை மீது அமெரிக்க விமானங்கள் குண்டுகளைவீசின. இதில் குறைந்தபட்சம் 5 பேர் இறந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
அதே போல இன்னொரு அமெரிக்க ஜெட் விமானக் குண்டு காண்டஹாரை அடுத்த பஞ்சவீ பகுதியில் வீடுகள் மீதுவிழுந்து வெடித்தது. இதில் 9 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
கடும் தாக்குதல்:
தாக்குதல் தொடங்கிய கடந்த 9 நாட்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தாக்தலை ஆப்கானிஸ்தான்நேற்று தான் சந்தித்தது. தொடர்ந்து அமெரிக்க விமானங்கள் வரிசையாக வானில் வந்த வண்ணம் இருந்தன.குண்டுகளை போட்டவண்ணம் இருந்தன.
இடைவிடாமல் நூற்றுக்கணக்கான விமானங்கள் ஆப்கானிஸ்தான் விண்ணை ஆக்கிரமித்திருந்தன.
காண்டஹார், காபூல், மஷார்-ஏ-ஷெரீப், ஜலாலாபாத் போன்ற தலிபான்களின் தலைமையகங்கள் அமைந்துள்ளபகுதிகள் மீது விமானங்கள் குண்டுகளை மழையாகப் பொழிந்தன.
குண்டுகள் வெடிப்பதும் ஓலங்களும் கேட்ட வண்ணம் இருந்தன. ஒவ்வொரு தாக்குதலிலும் 18 முதல் 20விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தலிபான் ராணுவத்தினர் 5,6 பேர் கூட்டமாக நின்றிருந்தாலே அங்கே குண்டு வந்து விழுகிறது.












Click it and Unblock the Notifications