For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலிபான் நகரைக் கைப்பற்றிய எதிர் படையினர்

By Staff
Google Oneindia Tamil News

மஷார்-ஏ-ஷெரீப் (வடக்கு ஆப்கானிஸ்தான்):

தலிபானின் கட்டுப்பாட்டில் இருந்த மஷார்-ஏ-ஷெரீப் நகருக்குள் தலிபான் அரசின் எதிரிப் படைகளான நார்தர்ன்அலையன்ஸ் படையினர் புகுந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்தன.

இந்நகரின் அருகே உள்ள ஒரு சாலையை அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தகர்த்தன. இவ்வழியாகத்தான்மஷார்-ஏ-ஷெரீப்புக்குள் நுழைய நினைத்துக் கொண்டிருந்த நார்தர்ன் அலையன்ஸ் படையினர், அமெரிக்கவிமானங்களின் இந்தத் தாக்குதல் குறித்து ஒன்றும் புரியாமல் விழித்தனர்.

ஆனால், நார்தர்ன் அலையன்ஸ் படையினருக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத்தான் இந்தத் தாக்குதலைஅமெரிக்கா நடத்தியது பின்னர்தான் தெரிய வந்தது.

தற்போது இவ்வழியாக எளிதாகச் சென்ற நார்தர்ன் அலையன்ஸ் படையினர், உஸ்ஸாத் அட்டா என்ற கமாண்டர்தலைமையில் மஷார்-ஏ-ஷெரீப் நகருக்குள் புகுந்து விட்டனர்.

அங்கு இவர்களுக்கும் தலிபான்களுக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இன்று அல்லதுநாளைக்குள் மஷார்-ஏ-ஷெரீப் நகரைக் கைப்பற்றப் போவதாக நார்தர்ன் அலையன்ஸ் படையினர்தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X