உயிரைக் கொடுக்கவும் திமுகவினர் தயார்: கருணாநிதி
சென்னை:
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலராவது மனச் சாட்சிக்குப் பயப்படுவார்கள் என்றுநினைத்தோம். ஆனால் எங்கள் நம்பிக்கை பொய்த்து விட்டது. நியாயத்திற்காக உயிரைக் கூட தருவதற்குதிமுகவினர் தயாராக உள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
புதன்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் சமயங்களில் ஏற்படும் வன்முறைகளை எப்படி எதிர் கொள்வது என்று திமுகவினருக்குத் தெரியும்.
நேற்று நடந்த சம்பவங்கள் "வேலியே பயிரை மேய்ந்த" கதை போலத்தான் இருந்தது. வன்முறைக்கு எதிராகச்செயல்பட வேண்டிய ஆளும் அதிமுகவும் போலீசாரும் சேர்ந்தே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக ரவுடிகள் இப்படி சேர்ந்து கொண்டு திமுகவை ஒடுக்குவது ஏன்? இவர்களின் ஒரு சிலருக்காவது மனச்சாட்சிஇருக்கும் என நினைத்தோம். ஆனால் எங்கள் நம்பிக்கையை அவர்கள் பொய்யாக்கி விட்டனர்.
வன்முறைக்கு எதிராக திமுக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. இதற்காக திமுகவினர் உயிரை விடவும்தயாராக உள்ளனர் என்றார் கருணாநிதி.