சிவகங்கையில் அதிமுக தொண்டர் குத்திக் கொலை: திமுகவினர் மீது புகார்
சிவகங்கை:
சிவகங்கையில் அதிமுக-திமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் அதிமுக வேட்பாளரின் மைத்துனர்கொல்லப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியின் பஞ்சாயத்து தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
பஞ்சாயத்து தேர்தலில் தற்போதைய பஞ்சாயத்து தலைவரான ராமலிங்கம் போட்டியிடுகிறார். இவர் அதிமுகவைச்சேர்ந்தவர். இவரை எதிர்த்து போட்டியிடுபவர் திமுகவைச் சேர்ந்த பிரபாகர்.
ராமலிங்கத்துக்கு ஆதரவாக அவரது மைத்துனர். வெள்ளைச்சாமி என்கிற சுப்பாயி (வயது 40). என்பவரும் அவரதுதம்பி கணேசன் ஆகியோரும் தீவிர பிரச்சார்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திருப்பாச்சேத்தியில் சிவன் கோவில் பகுதியில் போஸ்டர் ஒட்டுவதில் அதிமுக-திமுகவினருக்குஇடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் முற்றியது. திமுகவினர் வெள்ளைச்சாமியின் வயிற்றில் கத்தியால்குத்தினர்.
காயமடைந்து ரத்தம் கொட்ட மயங்கி விழுந்தார் வெள்ளைச்சாமி. அவர் உடனடியாக சிக்சைக்காக மதுரை அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வெள்ளைச்சாமிஇறந்து போனார்.
இந்த கொலை தொடர்பாக வெள்ளைச்சாமியின் தம்பி போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்துளனனர். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக தொண்டர் கொலை செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. மேலும்அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமலிருக்க அதிக அளவில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.