வேன், மினி லாரி மோதல்: 2 பெண்கள் உள்பட 3 பேர் சாவு
சென்னை:
மாமல்லபுரம் அருகே வேனும், மினி லாரியும் மோதிக் கொண்டதில் 3 பேர் இறந்தனர். 22பேர் காயமடைந்தனர்.
திருப்போரூர் அருகேயுள்ள புதுப்பாக்கத்தில் தனியார் ஜவுளி நிறுவனம் உள்ளது.
இதில் ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் நகரின் பல்வேறுபகுதிகளில் வசிப்பதால் நிறுவனத்தின் சார்பில் வேன் வைத்து பணியாளர்கள் வீடுகளுக்குகொண்டு இறக்கி விடப்படுவார்கள்.
இதேபோல, புதன்கிழமை மாலையும் பணி முடித்த பெண்களை வேனில் ஏற்றிக் கொண்டுவேன் டிரைவர் கல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாமல்லபுரம் அருகே கடும்பாடி என்ற கிராமத்திற்கு அருகே வேன் போய்க்கொண்டிருந்தபோது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென குறுக்கிட்டது.
இதனால் பயந்து போன வேன் டிரைவர் வேனை வலது புறத்தில் திருப்பியுள்ளார்.அப்போது எதிரே வந்த மினி லாரியுடன், வேன் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
இதில் வேன் டிரைவர் தண்டபாணி, பெண் ஊழியர்கள் தேவி, வசந்தா ஆகியோர்பலியாயினர். வேனில் இருந்த பிற பெண்களும் காயமடைந்தனர். மொத்தம் 22 பேர்காயமடைந்தனர்.
அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெண்கள் அனைவரும்கல்பாக்கம், கூவத்தூர், வேப்பம்சேரி, பரமேஸ்வரி மங்கலம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications