முத்தரப்பு கிரிக்கெட்: கென்யாவிடம் இந்தியா தோல்வி
போர்ட் எலிசபெத்:
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில், புதன்கிழமை (நேற்று) இரவு நடந்த லீக்போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் கென்யாவிடம் இந்தியா தோற்றுப் போய்விட்டது.
பந்து வீச்சில்தான் இந்தியா கோட்டை விட்டது என்றால், பேட்டிங்கிலும் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை.
எதிரணியினர் பெரிய ஸ்கோரை இலக்காக வைத்து விட்டார்களே என்று மீண்டும் பயம் கொள்ள ஆரம்பித்துவிட்டனர் இந்திய அணியினர்.
ஆரம்பத்திலிருந்தே ஓரிரு ரன்களாக மட்டுமே இந்தியா எடுத்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் முன்னணிஆட்டக்காரர்களான டெண்டுல்கர், டிராவிட் ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியனுக்குத் திரும்பிக் கொண்டேஇருந்தனர்.
46.4 ஓவர்களில் 176 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.
சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்தான் அதிக அளவாக 37 ரன்களை எடுத்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
முதல் லீக் ஆட்டத்தில் 11.3 ஓவர்களிலேயே கென்யாவின் 90 ரன்களை இந்திய அணியினர் எடுத்தனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications