வன்முறை: அரசிடம் அறிக்கை கேட்கிறார் ஆளுனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவின் போது நடந்த வன்முறை குறித்து விரிவான அறிக்கைஅளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவு செவ்வாய்கிழமை நடந்தது. இந்த தேர்தலின் போதுசென்னையிலும், மேலும் சில இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கள்ள ஓட்டும் போடப்பட்டது.

தேர்தல் போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள் தமிழக ஆளுனராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும்ரங்கராஜனுக்கு செவ்வாய்க்கிழமையன்றே கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆந்திராவிலிருந்த அவர் தமிழக தலைமைச் செயலாளர் சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னைபுதன்கிழமை சென்னை ஆளுனர் மாளிகையில் சந்திக்குமாறு அவருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி நேற்று (புதன்கிழமை) ரங்கராஜனை சந்தித்தார் சங்கர். சென்னை மாநகராட்சி தேர்தலின் போதுவன்முறை நடக்கவுள்ளதாக முன்னரே பல தகவல்கள் வெளிவந்தன.

இது குறித்து திமுக தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.அந்த கடிதம் தமிழகஅரசின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வாறு இருந்தும் ஏன் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தவில்லை. முன்னெச்செரிக்கை நடவடிக்கைள் ஏன் எடுக்கவில்லை என்று சங்கரை கேள்வி கேட்டுதுளைத்தெடுத்தார் ஆளுனர்.

தேர்தல் போது நடந்த வன்முறை குறித்து விரிவான அறிக்கையை தன்னிடம் வியாழக்கிழமை சமர்பிக்க வேண்டும்என்றும் ஆளுனர் உத்தரவிட்டார்.

ஆளுனரின் இந்த உத்தரவையடுத்து தேர்தல் போது நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கை தயாரிக்கும் பணியில்புதன்கிழமையன்று அரசு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+