அமெரிக்க தரைப்படையினரின் தாக்குதல் ஆரம்பம்
டெஹ்ரான்:
தற்போது விமானங்களைக் கொண்டு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா,வியாழக்கிழமை (இன்று) தரைப்படைத் தாக்குதலையும் துவங்கியுள்ளதாக ஈரான் வானொலி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்துதான் இந்த ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தானின் காண்டஹார் நகருக்குள் அமெரிக்கத்துருப்புக்களை இறக்கியுள்ளன என்று கூறப்படுகிறது.
காண்டஹாரில் அமெரிக்க தரைப் படையினருக்கும் தலிபான் படையினருக்குமிடையே பயங்கரத் துப்பாக்கிச்சண்டை நடந்து கொண்டிருக்கின்றன.
தரைப்படைத் தாக்குதல் ஆரம்பித்து விட்டதை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். தரைப்படையினர் தங்கள் பணியைச் செம்மையாகச் செய்வர் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்க விமானங்கள் காபூல் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்துகாபூல் விமான நிலையம் அருகே உள்ள பகுதிகள் முழுவதும் பற்றி எறிந்து கொண்டிருக்கின்றன.