பல்லாவரத்தில் வாக்காளர்கள் சாலை மறியல்... போலீஸ் தடியடி
Subscribe to Oneindia Tamil
பல்லாவரம்:
சென்னை அருகே பல்லாவரத்தில் வியாழக்கிழமை (இன்று) நடந்த 2வது கட்ட வாக்குப் பதிவின் போது, சாலைமறியல் செய்ய முயன்ற வாக்காளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
பல்லாவரத்தில் வாக்களிக்கச் சென்ற சிலர், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால்அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த போலீசார், அவர்களைக்கலைந்து போகுமாறு கூறினர்.
ஆனால் அவர்கள் கலைய மறுக்கவே, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்த ஆரம்பித்தனர். இதையடுத்துஅவர்கள் கலைந்து ஓடினர்.
இதேபோல், தருமபுரி மாவட்டம் ஹாரூரிலும் இரண்டு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட தகராறைக் கலைப்பதற்காகபோலீசார் தடியடி நடத்தினர்.












Click it and Unblock the Notifications