திருச்சியில் மண் சரிந்து கட்டிட தொழிலாளி மரணம்
திருச்சி:
மண் சரிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சி டவுனின் மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி சின்னக்கடை வீதி. இங்கு கட்டிடம் கட்டும் பணியில் சிலதொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அஸ்திவாரம் தோண்டும் பணியில் 3 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. கோபுரம் போல் இவர்கள் தோண்டி போட்டிருந்த மணல் முழுவதுமாகசரிந்து இவர்கள் மீது விழுந்து இவர்களை மூடிவிட்டது. உடன் பணிபுரிந்த தொழிலாளர்களால் இவர்களைகாப்பாற்ற முடியவில்லை.
உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மணிலில்சிக்கியிருந்த 3 பேரையும் மீட்டனர். ஆனால் அவர்களில் ஒருவர் இறந்து போயிருந்தார்.
பலத்த காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இநத் சம்பவம் தொடர்பாக கட்டிட பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications