தீக்குளித்த தந்தை, 3 குழந்தைகள் சாவு
சென்னை:
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது நான்கு குழந்தைகளுக்கும் தீவைத்து விட்டு தானும் தீவைத்துக் கொண்டநபர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவரது மூன்று குழந்தைகளும் இறந்தனர்.
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர் துரை. இவர் டிரை சைக்கிள் டிரைவர். சம்பாதிக்கும் பணத்தை இவர் வீட்டிற்குதருவதில்லை. இதனால் இவருக்கும் மனைவி சாந்திக்கும் இடையே அடிக்கடி தகராறு வரும்.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு வழக்கம் போல சண்டை வந்தது. சண்டையின் முடிவில் சாந்தி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த துரை, தனது குழந்தைகள் நான்கு பேரையும் மண்ணெண்ணை வைத்து தீவைத்துக்கொளுத்தினார். பிறகு அவரும் தன்னைத் தானே கொளுத்திக் கொண்டார்.
தீயில் கருகிய நிலையில் ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனளிக்காமல் துரையும், 3 குழந்தைகளும் வெள்ளிக்கிழமை இறந்து விட்டனர். துரையின் மகள்கங்கா மட்டும் உயிருக்கு ஊசலாடி வருகிறார்.












Click it and Unblock the Notifications