தரைப்படை தாக்குதல் தொடங்கவில்லை: புஷ் மறுப்பு
ஷாங்காய்:
ஆப்கானிஸ்தானில் இன்னும் தரைப்படை தாக்குதலை அமெரிக்கா தொடங்கவில்லை என்று அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
தெற்கு ஆப்கானிஸ்தானில் இறங்கியுள்ள அமெரிக்க தரைப் படையினர் தலிபான் வீரர்களுடன் பயங்கரத்துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர் என்றும் அமெரிக்க பத்திரிக்கைகள் கூறியிருந்தன.
ஆனால் இந்தத் தகவல்களை புஷ் மறுத்துள்ளார். ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன்என்று கூறியுள்ள புஷ், தரைப்படைத் தாக்குதல் பற்றி மேலும் எதுவும் கூற மறுத்துவிட்டார்.
இதற்கிடையே அமெரிக்க விமானங்களும் ஆப்கானிஸ்தான் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.
12வது நாளாக இன்று காலையிலேயே தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்க விமானங்கள் காபூல் நகரில் நடத்தியகுண்டு வீச்சுத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்றைய தாக்குதலின் போது, காண்டஹார் நகரில் அமெரிக்க விமானங்கள் க்ரூஸ் ஏவுகணைகளைப்பயன்படுத்தின என்று தலிபான் தொலைக்காட்சியான அல்-ஜசேரா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications