தேர்தல் வன்முறை... ஆளுனர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: இளங்கோவன்
சென்னை:
தமிழக உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து ஆளுனர் நடவடிக்கை எடுக்காததுஏமாற்றமளிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
கடந்த 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 16ம் தேதிநடைபெற்ற முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வன்முறை வெடித்தது.கள்ள ஓட்டுகளும் போடப்பட்டன.
18ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலிலும் வன்முறை சம்பவங்களும், கள்ள ஓட்டு போடுவதும்தொடர்ந்தது .
இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக உள்ளாட்சி தேர்தல்களில் முதல் கட்ட தேர்தலைவிட இரண்டாவது கட்ட தேர்தலில் வன்முறை சம்பவங்கள்அதிகம் நடந்துள்ளன. கள்ள ஓட்டும் அதிகமாக போடப்பட்டுள்ளது.
இது குறித்து ஆளுனர் நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது. தேர்தல் வன்முறைக்கும், கள்ள ஓட்டுபோடுவதற்கும் காரணமாக இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுகேட்டுக் கொண்டபோது அதை காங்கிரஸ் கட்சி எதிர்த்தது.
ஆனால் தற்போது நடந்துள்ள தேர்தல் வன்முறை சம்பவங்களுக்கு பின் காங்கிரஸ் கட்சி தன் நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. தேர்தல் நடந்த இடங்களில் தேவையான அளவு போலீஸ் காவல் போடப்படவில்லை.
தற்போது தேர்தலில் நடந்த வன்முறை ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டது.
ஜார்ஜ் பெர்னாண்டசை மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருப்பதை எதிர்த்து இன்னும் இருதினங்களில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெறும் என்று கூறினார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications