உள்ளாட்சி தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்கு பதிவு
சென்னை:
தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளனஎன்று மாநில தேர்தல் ஆணையர் பி.எஸ். பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இரண்டுகட்ட தேர்தலிலும் சேர்த்து 64.66 சதவிகிதம் வாக்கு-கள் பதிவாகியுள்ள-ன என்று பி.எஸ். பாண்டியன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
2வது கட்ட தேர்தலின்போது அசம்பாவிதம் காரணமாக தடைபட்ட காஞ்சிபுரம், ஆலந்தூர் உள்ளிட்ட 193தொகுதிகளில் சனிக்கிழமை மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த மொத்தமுள்ள 80 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 500 வாக்கு சாவடிகளில்மட்டுமே வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இந்த வன்முறை சம்பவங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறினார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications