இந்திய தபால்துறை உஷார்
டெல்லி:
தபால்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் பரப்பப்பட்டு வருவதால் வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்கள் முழுபரிசோதனைக்கு உட்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
கடந்த 2 வாரகாலமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் விஷக்கிருமிகளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளுக்குஅனுப்பி வருகின்றனர்.
இந்தப் பார்சலில் பஞ்சு போன்ற ஒரு பொருளுக்குள் அந்த கிருமி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதுபோன்ற தபால்கள் இந்தியாவுக்கும் வர ஆரம்பித்துவிட்டன.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதனை செய்த பிறகேநாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றன என்று தபால்துறைச் செயலாளர் குப்தா கூறினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் கிருமிகளைப் பரப்பக் கூடும் என்பதால், வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும்தபால்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதனை செய்யப்படுகின்றன.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள சர்வதேச தபால்துறை விதிமுறைகள் அனைத்தையும் சரியாகப்பின்பற்றவேண்டும் என்று, தபால்களைப் பிரிக்கும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.
அனைத்து சர்வதேச விமானநிலையங்களில் உள்ள தபால் அலுவலகங்களில் பரிசோதனைதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தபால்களைப் பிரிக்கும் அதிகாரிகள் அனைவரும், முன்னெச்சரிக்கையாக கைகளில் கிளவுஸ் மற்றும் முகத்தில்மாஸ்க் அணிந்துகொண்டு பணியில் ஈடுபடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆந்த்ராக்ஸ் கிருமிகள் அடங்கிய பார்சல்களைக் கண்டறியும் கருவிகள் எதுவும் தற்போதைக்கு தபால்துறையிடம்இல்லை. ஆனால் தேவைப்படும்போது அதுசம்பந்தமான நிறுவனங்களிடம் உதவி கோர முடிவெடுத்துள்ளோம்.
மேலும் அமெரிக்காவிலிருந்து வரும் தபால்களும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்தபால்களும் நிறுத்தப்படவில்லை.
இவ்வாறு குப்தா கூறினார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications