For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் சி.எஸ்.ஐ. அலுவலகத்திற்கும் ஆந்த்ராக்ஸ் பார்சல்?

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

வேலூர் சி.எஸ்.ஐ.அலுவலகத்திற்கு நேற்று வந்த மர்ம பார்சலால் ஆந்த்ராக்ஸ் பீதி எழுந்துள்ளது.

கடந்த 2 வாரகாலமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் என்னும் கொடிய விஷக்கிருமிகளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன்அதிகாரிகளுக்கு அனுப்பிவருகின்றனர்.

இந்தப் பார்சலில் பஞ்சு போன்ற ஒரு பொருளுக்குள் அந்த கிருமி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) காலை வேலூர் சி.எஸ்.ஐ. டையோசிஸ் அலுவலகத்திற்கு தபால் ஒன்றுவந்துள்ளது. அதை நித்தியானந்தம் என்பவர் பிரித்துள்ளார். கவருக்குள் மஞ்சள் கலர் பேப்பரில் பொட்டலமும்,கடிதம் ஒன்றும் இருந்திருக்கிறது.

கடிதத்தில் 78ஜி என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது. மேலும், இந்தியாவிற்கு எதிரான நாசகார வேலைகள்துவங்கிவிட்டன. அமெரிக்காவில் மட்டுமல்ல, இனிமேல் இந்தியாவிலும் இதுபோன்ற ஆந்த்ராக்ஸ் கிருமிகள்பரப்பப்படும். இனி எங்கும் முஸ்லீம்கள் ஆட்சிதான். இப்படிக்கு அல்லாஹூ என்று எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து நித்தியானந்தம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தபாலில் வந்த மர்மபொட்டலத்தை வேலூர் சி.எம்.சி., மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் வேலூர்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X