ஊருக்குள் வந்துவிட்டு தப்பிய வீரப்பன்

Subscribe to Oneindia Tamil

அந்தியூர்:

அதிரடிப்படையினர் தேர்தல் பணிக்குச் சென்றிருந்ததால் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வீரப்பன் ஊருக்குள்புகுந்து மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டு மாயமாய் மறைந்துவிட்டான்.

இதுகுறித்த விவரம் வருமாறு,

வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினர், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்நடைபெற்றதால் வனப் பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் பாதுகாப்பிற்காகச் சென்றுவிட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தன் கூட்டாளிகளுடன் புகுந்தான் வீரப்பன் ஊருக்குள் புகுந்துள்ளான்.

அந்தியூரை அடுத்த காட்டுப்பாறை என்ற கிராமத்தில் வீரப்பனும் அவனது கூட்டாளிகள் 10 பேரும் கூட்டமாகமூட்டை முடிச்சுகளுடன், கையில் துப்பாக்கிகளுடன் காட்டுக்குள் செல்வதை உளவுப்பிரிவு போலீசார்பார்த்துவிட்டனர்.

ஆனால், அவர்களிடம் வயர்லெஸ் மட்டுமே இருந்தது. துப்பாக்கிகள் இல்லை. இதையடுத்துஅதிரடிப்படையினருக்கு அவர்கள் அவசரத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்தததும் மின்னல் வேகத்தில் பறந்துவந்த அதிரடிப்படையினர் அந்தியூர், சத்தியமங்கலம், பன்னாரி ஆகியகாட்டுப் பகுதிகளில் புகுந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆனால் வீரப்பன் மாயமாய் மறைந்துவிட்டான். இருப்பினும் அதிரடிப்படையினர் அவன் சென்ற வழியை ஒட்டியகாட்டுப் பகுதிகளில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து அதிரடிப்படை அதிகாரி ஒருவர் கூறும்போது, தற்போது வீரப்பன் கைக்கு எட்டும் தூரத்தில்தான்இருக்கிறான். அவனை எப்படியும் பிடித்மதே தீருவோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+