3 நாட்களில் 60 ஆப்கானிய மக்கள் பலி

Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானின் காபூல் நகரத்தின் மீது அமெரிக்கா நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 18 அப்பாவிப் பொதுமக்கள்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 3 நாட்களில் ஹெராத் நகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள்கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலிபான்களின் பக்தார் செய்தி நிறுவனத்தின் தலைவர் அபுல் ஹனன் ஹேமத் கூறுகையில்,

காபூல் நகரத்தின் மீது அமெரிக்கா இன்று அதிகாலை விமானம் மூலம் குண்டுவீச்சு நடத்தியுள்ளது. இந்தத்தாக்குதலில் காபூலில் 18 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 23 பேர்படுகாயமடைந்துள்ளனர். 17க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாகச் சேதமடைந்துவிட்டன.

இதேபோல ஹெராத் நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கடந்த 3 நாட்களில் 50க்கும் மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் ஹெராத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஈசாக்சலைமான் என்ற கிராமத்தில் சனிக்கிழமை இரவுநடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காபூலில் இன்று அதிகாலை குண்டு வீச்சு

இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் காபூலில் இன்று அதிகாலை 3க்கும் மேற்பட்ட இடங்களில் விமானம் மூலம்அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியது.

காபூலில் அமெரிக்க விமானங்கள் இன்று அதிகாலை குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியன. பாபூல் நகரத்தின்வடக்குப் பகுதியில் இந்த குண்டுவெடிப்புச் சத்தம் பலமாகக் கேட்டதாக பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

குண்டுவீசுவதற்கதாகத் தாழ்வாகப் பறந்த விமானத்தின் மீது தலிபான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சத்தம்20 நிமிட இடைவெளியில் 2 அல்லது 3 முறை கேட்டது என்றும் அவர்கள் கூறினார்கள்.

மேலும் அந்த விமானம் ஹெலிகாப்டர் போன்ற அமைப்பில் இருந்தததாகவும், அதற்கு முன்பாக ஒரு ஜெட்விமானமும் பறந்து சென்றதாகவும் அவர்கள் கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+