திருச்சியில் தமாகா முன்னிலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மேயர் பதவிக்கான தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலாதொண்டமான் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
இன்று(திங்கள்கிழமை) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பின்பு முதலில்வெளியான முன்னணி நிலவரப்படி திமுக வேட்பாளர் நிர்மலா லோகநாதன்முன்னணியிலிருந்தார்.
ஆனால் அதையடுத்து வந்த தகவலில் காங்கிரஸ் வேட்பாளர் எமிலி ரிச்சர்ட்முன்னணியில் உள்ளார் என்று கூறப்பட்டது.
கடைசியாகக் கிடைத்தத் தகவலின்படி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலாதொண்டமான் தமக்கு அடுத்தபடியாக வரும் திமுக வேட்பாளர் நிர்மலா லோகநாதனைவிட 4,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னணிய்ல இருக்கிறார்.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications