ரஷ்ய அதிபர்- ஆப்கான் ஜனாதிபதி சந்திப்பு
துஷான்பே:
தலிபான்களின் எந்தக் குழுவையும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தக் கூடாது என ரஷ்யா திட்டவட்டமாகக்கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் முல்லா ஒமர் தலைமையிலான தலிபான் ஆட்சியை நீக்கிவிட்டு அங்கு மீண்டும் பிற தலிபான்தலைவர்களைக் கொண்ட ஆட்சியை அமைக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரி வருகிறது.
மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால் ஆப்கானிஸ்தானை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும் என பாகிஸ்தான் கருதுகிறது. இந்த நிபந்தனையின் கீழ் தான் அமெரிக்கப் படையினருக்கு பாகிஸ்தான்உதவி வருகிறது.
இதையடுத்து அமெரிக்காவும் தலிபான்களின் சில பிரிவினரை உள்ளடக்கிய ஆட்சி அமைப்பது குறித்து பேசஆரம்பித்துள்ளது.
இதற்கு இந்தியா தான் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது. மீண்டும் தலிபான்களைக் கொண்ட ஆட்சி அமைந்தால்பாகிஸ்தான் உதவியுடன் தீவிரவாதம் மீண்டும் தலையெடுக்கும் என இந்தியா கருதுகிறது.
இந்தியாவின் இந்தக் கருத்தை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. இந் நிலையில் இந்தியாவின் நிலைக்கு ரஷ்யாமுழு ஆதரவு தெரிவித்துள்ளது.
பீஜிங்கில் நிருபர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,
தலிபான்களில் நல்ல தலிபான்கள், கெட்ட தலிபான்கள் என்று எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள்தீவிரவாதிகள். அவர்களை ஒழிப்பது தான் நல்லது. அதை விட்டுவிட்டு மீண்டும் தலிபான்களைக் கொண்ட ஆட்சிஅமைக்க முயல்வது தவறானது. இதை ரஷ்யா ஒருபோதும் ஏற்காது என்றார்.
பின்னர் இன்று காலை (திங்கள்கிழமை) தஜிகிஸ்தான் புறப்பட்டுச் சென்ற புடின் அங்கு தலைநகர் துஷான்பேயில்ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி புர்ஹானுதீன் ரப்பானியை சந்தித்துப்பேச்சு நடத்தினார். தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ரகோமோவுடனும் அவர் பேச்சு நடத்தினார்.
அங்கு ரப்பானியுடன் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். ஆப்கானிஸ்தானில் அனைத்து இனத்தினரையும்கொண்ட அடுத்த அரசு அமைய வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கு தஜிகிஸ்தான் முழு உதவி தந்துவருகிறது. ரஷ்யா ஆயுதங்கள் தந்து வருகிறது. இந்தியாவும் ஈரானும் நிதியுதவி தந்து வருவதாகக் கூறப்படுகிறது.