கருணாநிதியின் கபட நாடகங்களை மக்கள் கண்டுகொள்ளவில்லை - ஜெ.
சென்னை:
மக்கள் அனுதாபத்தைப் பெற்றுவிட வேண்டும் என்று பலவிதமான கபட நாடகங்களை கருணாநிதிஅரங்கேற்றினாலும், பொதுமக்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நல்ல தீர்ப்பை அளித்துள்ளனர் என்றுஅதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் அமோக வெற்றி குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு என் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் எல்லாம் அக்கட்சியை மக்கள்புறக்கணித்துள்ளனர். திமுக போடும் கபட நாடகங்களுக்கெல்லாம் மக்கள் பணிய மாட்டார்கள் என்பதையே இதுகாட்டுகிறது.
தேர்தலில் வென்ற அதிமுக வேட்பாளர்களும் மக்கள் நலத் திட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றுஅந்த அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications