கயத்தாறு அருகே வேன் கவிழ்ந்து 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கயத்தாறு:
கயத்தாறு அருகே இன்று (புதன்கிழமை) காலை ஒரு வேன் கவிழ்ந்ததில் 2 பேர் பலியானார்கள். 7 பெண்கள்உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த சில கூலித் தொழிலாளர்கள் தொலைபேசி நிலைய ஒப்பந்த வேலைக்காக திருநெல்வேலிவந்திருந்தனர்.
ஒப்பந்தக் காலம் முடிந்ததையடுத்து, இன்று காலை அந்த கூலித் தொழிலாளர்கள் திருநெல்வேலியிலிருந்து வேன்மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கயத்தாறுக்கும் கோவில்பட்டிக்கும் இடையே வந்து கொண்டிருக்கும்போது, இடைச்சேவல் என்ற கிராமத்தின்அருகே நிலை தடுமாறி அந்த வேன் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இவ்விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பெண்கள் உள்பட 13 பேர் பலத்தகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கயத்தாறு போலீசார் இவ்விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications