வெள்ளை மாளிகையிலும் ஆந்த்ராக்ஸ் பீதி
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட கவரில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருந்ததாக வந்ததகவல்களை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு வரும் தபால்களைப் பிரிக்கும் "ஸ்லிட்டர்" என்ற மெக்கானிக்கல் கருவியில்வெள்ளைப் பவுடர் படிந்திருந்ததைக் கண்டு மிரண்டு போன வெள்ளை மாளிகை ஊழியர்கள் உடனடியாக அதைப்பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பவுடரில் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் ஏதும் இல்லை என்று பரிசோதனைமுடிவுகள் தெரிவித்தன.
வெள்ளை மாளிகைக்குள் இதுவரை அந்தக் கிருமி காணப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்பாதுகாப்புடன் இருக்கிறார். "எனக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு இல்லை. நாளை காலை அலுவலகத்திற்கு வரும்போதுநல்ல சுகத்துடன்தான் வரப்போகிறேன்" என்று கூறினார் புஷ்.
இந்தக் கிருமியைத் திட்டமிட்டுப் பரப்பிவரும் தீவிரவாதிகளைப் பிடித்து நீதியின் முன் நிறுத்தும் வரை நாங்கள்ஓயமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
ஆனால் வெள்ளை மாளிகை விலாசத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஆந்த்ராக்ஸ் இருந்ததா என்றும், அந்தக்கடிதம் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்துவிட்டதா என்றும் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications