சொத்து குவிப்பு வழக்கில் ரயில்வே அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரிக்கு 2 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தென்னக ரயில் வேயில் வணிகப்பிரிவு மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஐ.எஸ். இக்பால். இவர் கடந்த1987-1995 ஆண்டு வரை ரு.8.53 லட்சம் மதிப்புக்கு சொத்து சேர்த்ததாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தது.
இது அவருடைய வருமானத்திற்கு அதிகமாக இருந்ததால் புலனாய்வுத் துறை இவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்.கலையரசன், இக்பாலுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும் பல்வேறு வங்கிகளில் இவர் பெயரில் இருக்கும் பணத்தை தமிழக அரசு முடக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications