மருது பாண்டியர் விழா - இன்று சிவகங்கை செல்கிறார் பன்னீர்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று (புதன்கிழமை) நடைபெறவிருக்கும் மருதுபாண்டியர் விழாவில்கலந்து கொள்ள முதல்வர் பன்னீர்செல்வம் செல்கிறார்.
தமிழக அரசு சார்பில் சிவகங்கை மன்னர்கள் மருது சகோதரர்களின் 200-வது நினைவுநாள் விழா இன்றுநடத்தப்படுகிறது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் பன்னீர் செல்வம் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம்மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருப்பத்தூருக்குச் செல்கிறார். அங்குள்ள மருதுபாண்டியர்நினைவிடத்துக்குச் சென்று சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
பிறகு சீரணி அரங்கில் மாலையில் நடக்கும் விழாவில் மருதுபாண்டியர் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறார்.
பன்னீர் செல்வம் முதல்வரான பின் கலந்துகொள்ளும் முதல் அரசு நிகழ்ச்சி இதூன். இருப்பினும் முதல்வரைவரவேற்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எளிமையான ஏற்பாடுகளே செய்யப்பட்டுள்ளன.
அரசு சார்பில் அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் மருதுபாண்டியர் படங்கள் மட்டுமே உள்ளன. முதல்வர் உள்ளிட்டதலைவர்கள் படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.












Click it and Unblock the Notifications