தப்பிக்க முயன்றவர்கள் மீது அமெரிக்க விமானம் தாக்குதல் - 20 பேர் பலி
குவெட்டா:
ஆப்கான் மீது அமெரிக்கா நடத்திவரும் விமானத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற 20 அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க விமானங்கள் குண்டுவீச்சை தொடங்கியவுடன் எங்கள் ஊரில் இருந்த அனைவரும் பயத்துடன்குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க மறைவிடம் நோக்கி அங்கும் இங்கும் ஓடினார்கள்.
நானும் ஓடினேன். முதல் குண்டு எங்கள் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால், களிமண்ணால் கட்டப்பட்ட எங்கள்வீடுகள் தூள் தூளாகி அந்தப் பகுதி முழுவதும் புழுதியைக் கிளப்பியது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கினர்.
இன்னும் இங்கு இருப்பது சரியல்ல என்று உணர்ந்த நானும் மற்றும் பல அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் ஒருடிராக்டரில் ஏறி டிரின் காட் நகரத்துக்குச் சென்று தப்பிக்க முயன்றோம். ஆனால் சற்று நேரத்திலேயே அந்தடிராக்டர் மீதும் அமெரிக்க விமானங்கள் ஒரு குண்டை வீசின.
இந்தத் தாக்குதலில் 19 பேர் அதே இடத்தில் உடல் சிதறி இறந்துவிட்டனர். நானும் மேலும் 5 பேரும் காயம்ஏற்பட்டு வலியால் துடித்துக் கதறிக்கொண்டிருந்தோம். காயமடைந்தவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
அவருடன் வந்த அவரது 4 குழந்தைகளும் இந்த குண்டுவீச்சில் பலியானார்கள். பிறகு சிறிது நேரத்தில் அவரும்இறந்துவிட்டார்.
காயமடைந்த 5 பேரும் மருத்துவ வசதி கிடைக்காததால் 6 கி.மீ. தூரம் வரை நடந்தே பாகிஸ்தானுக்கு வந்துசேர்ந்தோம். இவ்வாறு அவர்கூறினார்.
தற்போது அந்தக் குண்டு வீச்சில் உயிர் தப்பிய 5 பேருக்கும் குவெட்டா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications