பாகிஸ்தானில் அமெரிக்க ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள விமான தளம் ஒன்றில் அமெரிக்க ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது சுடப்பட்டதைதுரோகச் செயல் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதையடுத்து அந்த விமான தளத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்புப்போடப்பட்டுள்ளளது.
அப்போது அந்த ஹெலிகாப்டர் மீது திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டது. இதையடுத்து எரிபொருளை முழுவதும்நிரப்பாமல் சென்ற அந்த ஹெலிகாப்டரிலிருந்து, குண்டு வந்த திசையை நோக்கி திருப்பிச் சுடப்பட்டுள்ளது.
தனது ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடந்ததை அமெரிக்கா கண்டித்துள்ளது. இதுகுறித்து பென்டகன் செய்தித்தொடர்பாளர் விக்டோரியா கிளார்க் கூறுகையில், அவர்கள் நாட்டில் இருக்கும் போது எங்கள் ஹெலிகாப்டர் மீதுஅந்நாட்டவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது துரோகச் செயலாகும்என்றார்.
இதுகுறித்து பாகிஸ்தான் மிகுந்த கவலையடைந்துள்ளது. இது ஒரு தர்மசங்கடமான சம்பவம்என்று பாகிஸ்தான்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்போது அந்த பஞ்ச்போர் விமானத் தளத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும்அமெரிக்க ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவுவதை விரும்பாத பாகிஸ்தான் ராணுவத்தினரில் சிலர் தான் இந்தத் தாக்குதல்நடத்தியிருக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. ஆனால், தீவிரவாதிகள் தான் இச் செயலை செய்திருக்கவேண்டும் என பாகிஸ்தான் மழுப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications