For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது மதிமுக - வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் கவுரவமான வெற்றியைப் பெற்றிருப்பதன் மூலம் தமிழக அரசியலில் மதிமுக மாற்றுசக்தியாக விளங்குகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

இதுகுறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பட்டுக் கோட்டை, குளித்தலை ஆகிய 2 நகராட்சிகளையும், பலபேரூராட்சிகளையும் மதிமுக கைப்பற்றியுள்ளது.

போதுமான பணபலம் இன்றி அடிப்படைச் செலவுகளைக் கூடச் சந்திக்க முடியாத பொருளாதார நெருக்கடியுடன்மதிமுகவினர் போராடினார்கள். அந்நிலையிலும் மதிமுகவினர் மாறாத நெஞ்சுறுதியுடன், ஈடு இணையற்ற கடினஉழைப்பையும் பார்த்து அனைவரும் பிரமித்துள்ளனர்.

இத்தேர்தலில் கவுரவமான வெற்றியைப் பெற்றிருப்பதன் மூலம், தமிழகத்தில் மதிமுக மாற்று சக்தியாகவிளங்குகிறது.

வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, வெற்றிக்குஅயராது உழைத்த மதிமுக தொண்டர்களுக்கும், ஆதரவு தந்த பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X