தேர்தல் தோல்வி: விழுப்புரத்தில் திமுக தொண்டரின் ஜிம் மீது அதிமுகவினர் தாக்குதல்
விழுப்புரம்:
உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் கோபமுற்ற அதிமுகவினர், விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த "ஸ்டாலின்உடற்பயிற்சி நிலைய"த்தை அடித்து நொறுக்கிய 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம், நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மின்னல்ராஜா. இவர் திமுகவை சேர்ந்தவர். இவரது மனைவி ஈஸ்வரி.இவர் விழுப்புரம் 28வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் சாந்தி ஆறுமுகம் போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மின்னல் ராஜாவை போலீசார் தேர்தலுக்கு முன் கைதுசெய்தனர். இறுதியில் தேர்தலில் ஈஸ்வரி வெற்றி பெற்றார்.
இதையடுத்து, தோல்வியடைந்த காரணத்தாலும், முன் விரோதம் காரணமாகவும் அதிமுகவை சேர்ந்த ரவி அலெக்ஸ்,குமரன், கடப்பாரை என்கிற துரை, அறச்செல்வம், ஆறுமுகம் உள்ளளிட்ட 10 பேர் மின்-னல் ராஜா நடத்-தி வந்-த"மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி நிலைய"த்தினுள் கடந்த 21ம் தேதி புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்துநொறுக்கினர். கண்ணாடியாலான பெயர் போர்டையும் உடைத்தனர்.
இது குறித்து உடற்பயிற்சி நிலைய காவலர் மாயவன் போலீசில் புகார் கொடுத்தார்.அவர் கொடுத்த புகாரின்அடிப்படையில் விழுப்பும் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ரவி அலெக்ஸ்.குமரன்உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications