சென்னை மாநகராட்சி: இனி பிரச்சனையில்லை என்கிறது அதிமுக
சென்னை:
சென்னை மாநகராட்சி இனி ஜனநாயக முறைப்படி செயல்படும் என்று அதிமுக மற்றும் தமாகா ஆகிய கட்சிகளின்மாநகராட்சி மன்றத் தலைவர்கள் கூறினர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் மீண்டும் மேயராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், கவுன்சிலர்களாக அதிமுக மற்றும் தமாகா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தபெரும்பான்மையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்தப்பதவியேற்பு விழாவில் அதிமுக மற்றும தமாகாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
நிருபர்களிடம் பேசிய அதிமுக கவுன்சிலர் கராத்தே தியாகராஜன் கூறியதாவது,
சென்னை மாநகராட்சி மன்றத்தில் அதிமுக மற்றும் தமாகா பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால் இனிமேல்மாநகராட்சி மன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கும்தீர்மானங்களை நாங்கள் எப்போதும் ஆதரிப்போம் என்றார்.
தமாகா கவுன்சிலரான வெற்றிவேல் கூறுகையில், மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி மாமன்றத்தை நடத்தநாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார்.
கடந்த முறை இந்த இருவர் தலைமையில் தான் அதிமுகவும், தமாகாவும் ஸ்டாலினுக்கு பெரிய பெரிய சிக்கல்களைஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.