அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் கன மழை பெய்யும்
சென்னை:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம்அறிவித்துள்ளது.
வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந் நிலையில்,அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன. கடலில் கொந்தளிப்பும்ஏற்பட்டுள்ளது.
கோவையில் பெய்த கன மழைக்கு உப்பிலிப்பாளையம், பாண்டிபுதூர், வீர கேரளம் ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அங்குள்ளகுடிசைவாசிகள் அனைவரும் வீடிழந்துள்ளனர். வீர கேரளம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் நீரில் மூழ்கி விட்டதால் அங்குகுடியிருப்பவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் கன மழை காரணமாக நிலச்சரிவு, மண் சரிவு போன்றவை ஏற்படாமல் முன்னெச்சக்கை நடவடிக்கைகளைகாவல்துறையினரும், அதிகாரிகளும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தியுள்ளார்.