தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் பலி: ஆபத்தான நிலையில் 73 குழந்தைகள்
சென்னை:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்த நோய்க்கு 16 பேர்பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள்.
இந் நோயினால் மேலும் 300 பேர் பாதிக்கப்பட்ட சென்னையின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 73 குழந்தைகளின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள்தெரிவித்துள்ளனர்.
ஏ.டி.எஸ். எஜிப்டை என்ற கொசுவின் மூலமாக இந்த நோய்க்கான வைரஸ் மனிதர்களிடம் பரவுகிறது. மற்றகொசுக்களைப் போல சாக்கடை நீரில் இல்லாமல் இந்தக் கொசு நல்ல தண்ணீரில் தான் இனப் பெருக்கம் செய்கிறது.
இதனால் குடிநீரை சுத்தமாக மூடிவைக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நோய் முற்றினால் உடல் ஜில்லிட்டுப் போகும். வாந்தியிலும் மலத்திலும் ரத்தம் வெளியேறும். நோய்முற்றினால் 24 மணி நேரத்துக்குள் மருத்துவ சிகிச்சை பெற்றாக வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் ஏற்ற வேண்டி இருப்பதால் ரத்ததுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது. இதனால், அதிக அளவில் ரத்த தானம் செய்யுமாறும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 73 குழந்தைகளின் நிலை ஆபத்தாக உள்ளது. இவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மாநில நலத்துறை அமைச்சர் செம்மலை மருத்துவமனைகளுக்குச் சென்றுபார்த்தார்.












Click it and Unblock the Notifications