காஷ்மீர் மசூதியில் பதுங்கியிருந்த தீவிரவாதி சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் மசூதியில் பதுங்கியிருந்த தீவிரவாதி 45 மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டுக்கொல்லப்பட்டான்.
மத்திய காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்குள் ல
இவன் மசூதிக்குள் மறைந்திருப்பதை அறிந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் மசூதி வளாகத்தை சுற்றிவளைத்தனர். தப்பிச் செல்லும் எல்லா வழிகளையும் அடைத்தனர்.
அவனை சரணடையும்படி பலமுறை கோரியும் அதை அவன் ஏற்க மறுத்து துப்பாக்கியால் கண்மூடித்தனமாகசுட்டான். இதில் சிறப்புப் போலீஸ் படையின் அதிகாரி காயமடைந்தார்.
மசூதிக்கு சேதம் விளையாத வகையில் பாதுகாப்புப் படையினர் மிகக் கவனமாக தாக்குதல் நடத்தி வந்தனர்.கிட்டத்தட்ட 45 மணி நேரமாக இத் தாக்குதல் தொடர்ந்தது.
இந் நிலையில் இன்று காலை எல்லைப் பாதுகாப்புப் படையின் குழு அப் பகுதி முஸ்லீம்களின் துணையுடன்மசூதிக்குள் நுழைந்தது. ஆனால், மசூதியின் குளியலறை பகுதியில் மறைந்து கொண்ட தீவிரவாதி உள்ளே நுழைந்தபடையினர் மீது கிரனைட் குண்டை வீசினார். இதில் 3 எல்லைப் பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.
இதையடுத்து அவன் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினரும் கிரனைடை வீசினர். இதில் தடுமாறி விழுந்ததீவிரவாதியை சுட்டுக் கொன்றனர்.
பின்னர் தீவிரவாதியின் உடலை வெளியில் எடுத்து வந்தனர். அவனிடமிருந்த ஏக-47 துப்பாக்கி, 4 குண்டுகள்நிரம்பிய மேகன்ைகள், 27 குண்டுகளை கைப்பற்றினர்.
மசூதியில் வேறு தீவிரவாதிகள் மறைந்திருக்கிறார்களா எனவும் சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications